குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து11 பேர் பலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படைஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிங்டன் ராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.
விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத்தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமைத் தளபதி நரவணேஆகியோரும்இருந்ததாகக் கூறப்படுகிறது.
நஞ்சப்ப சத்திரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர்,தீயணைப்பு,வனத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 11 பேர் பலியாகியுள்ளதாகவும், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.3பேர் குறித்து தகவல்கள் வெளியிடப்படுமெனவும் தகவல்.ராணுவ உயரதிகாரிகளின் நிலை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
Tags :