பிலிப்பைன்ஸ் புயலில் சிக்கி பலி 208
பிலிப்பைன்சை தாக்கிய புயலில் பலியானோர் 208 . ‘ராய்’ சூறாவளி புயல், பிலிப்பைன்ஸ் தெற்கு -மத்திய பகுதிகளை தாக்கியது. பிலிப்பைன்சை தாக்கிய புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கரையை கடந்தபோது 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.
பலத்த மழை யல் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. சியார்கோ, சூரிகாவோ பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். புயலில் சிக்கி பலியானோர் 208 ..
Tags :