பழைய பரோட்டா சூடுபடுத்தி விற்பனை 50 கிலோ புரோட்டா சிக்கியது.

by Editor / 22-12-2021 12:32:27am
பழைய பரோட்டா சூடுபடுத்தி விற்பனை 50 கிலோ புரோட்டா சிக்கியது.

சால்னா மனத்தால் சாலையில் சென்றுகொண்டிருந்தாலும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் பொதுமக்களிடம் பரோட்டா சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மைதாவால் செய்யப்படும் பரோட்டா அதிகமாக உண்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று மருத்துவர்கள் எச்சரித்துவரும் போதிலும், சால்னாவில் கமகமக்கும் பொருட்களை சேர்ப்பதால் நாவுக்கு சுவையளிக்கும் வகையில் தயாரிக்கப்படுவதால் பரோட்டா சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.

 பரோட்டாக்களை சூடாக சாப்பிடவே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், முந்தைய நாளில் மீதமாகும் பழைய பரோட்டாகளை குளிர்சாதனப் பெட்டிகளில் பதப்படுத்தி வைத்து, பின்னர் மறுநாள் தண்ணீரில் முக்கி மீண்டும் கல்லில் போட்டுச் சூடுபடுத்தி விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்துவருகிறது.இது தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படுகிறதா எனப் பரிசோதிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில், அதிகாரிகள்  ஆய்வு மேற்கொண்டனர் .

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரலிங்கம் தலைமையிலான அதிகாரிகள் பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை மேற்கொண்டார்கள்.

அப்போது, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பரோட்டா கடையில், வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீரில் நனைத்து மீண்டும் சூடுபடுத்தி விநியோகம்  செய்வதற்காக குளிர்சாதனப் பட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோபுரோட்டாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, மேலப்பாளையம் பகுதியில் 10 கிலோ புரோட்டாவை  பறிமுதல் செய்யப்பட்டது.

சுமார் 50 கிலோ எடையுள்ள வேதிப் பொருள்கள் கலந்த அஜினோமோட்டா, கலர் பொடிகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 

 

Tags :

Share via