சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

by Editor / 22-12-2021 09:31:36pm
சென்னையிலிருந்து  தென் மாவட்டங்களுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

1. வண்டி எண் 06001 தாம்பரம் - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் 2022 ஜனவரி ஒன்றாம் தேதி புதன்கிழமை தாம்பரத்திலிருந்து இரவு 09.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06002 திருநெல்வேலி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 13 வியாழக்கிழமை திருநெல்வேலியிலிருந்து இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

2. வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் சென்னையிலிருந்து ஜனவரி 13 வியாழக்கிழமைஅன்று மாலை 03.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 14 அன்று மாலை 03.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகர்கோவில் - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (06006) மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.


3. வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரயில் ஜனவரி 17 திங்கட்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து மாலை 03.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 04.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

4. வண்டி எண் 06040 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று மறுநாள் காலை 07.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில்  வண்டி எண் 06039 தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி 17 அன்று காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 மின்சாரம் வழங்கும் பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

 

Tags :

Share via