ஐந்தருவியில் இருமாநில எல்லையோர மாவட்ட காவல்துறையினர் ஆலோசனைக்கூட்டம் 

by Editor / 23-12-2021 03:35:51pm
ஐந்தருவியில் இருமாநில எல்லையோர மாவட்ட காவல்துறையினர் ஆலோசனைக்கூட்டம் 

 

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் தமிழக கேரள எல்லையோர இரு மாவட்ட காவல்துறை அதிகாரிகளினுடைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் மற்றும் இருமாநில எல்லையோர காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சேர்ந்த காவல்துறையினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 18 விதமானகருத்துக்கள் குறித்து ஆலோசனைகள்  நடத்தப்பட்டு மாநில எல்லைப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை வனங்கள்  நிறைந்த பகுதி என்பதால் இந்த பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயல்களை செய்த கும்பல் நடமாட்டம் மேலும் தமிழகத்தில் குற்றம் செய்துவிட்டு கேரளாவில் பதுங்கி இருந்தல் கேரளாவில்  குற்றம் செய்தவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாக இருப்பவர்கள், நீதிமன்ற ஆணைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விதமான கருத்துக்கள் இந்தக் கூட்டத்தில் பரிமாறப்பட்டன,

 

Tags :

Share via