விருதுநகர் - மானாமதுரை-பழனி - பொள்ளாச்சி- மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதையில் மார்ச் 6,7 ஆய்வு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
விருதுநகர் - மானாமதுரை மற்றும் பழனி - பொள்ளாச்சி ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனவே மார்ச் 6 அன்று விருதுநகர் - மானாமதுரை புதிய மின்சார ரயில் பாதையையும், மார்ச் 7 அன்று பழனி - பொள்ளாச்சி புதிய மின்சார ரயில் பாதையையும் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்கிறார். பின்பு மானாமதுரை - விருதுநகர் மின் ரயில் பாதையில் மார்ச் 6 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும், பொள்ளாச்சி - பழனி மின் ரயில் பாதையில் மார்ச் 7 அன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரயில் சோதனை வேக ஓட்டம் நடத்த இருக்கிறார். எனவே பொதுமக்களும் ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் வேக சோதனை ஓட்டம் நடைபெறும் போது ரயில் பாதையை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : March 6,7 inspection of Virudhunagar-Manamadurai-Palani-Pollachi-Manamadurai-Virudhunagar railway line