மழைநீர் தேங்கிய பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வுகள் மேற்கொண்ட முதல்வர்

by Editor / 31-12-2021 12:48:42am
மழைநீர் தேங்கிய பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வுகள் மேற்கொண்ட முதல்வர்

சென்னையில் 14 சுரங்கபாதைகள் உள்ளன.இதில் 4 சுரங்கபாதைகள் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
நள்ளிரவு வரை அதிகாரிகளோடு ஆய்வு நடத்திய முதல்வர் சென்னை பெரியமேட்டில் மழைவெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிநடந்துவருவதையும்  அதிகாரிகளோடு சென்று பார்வையிட்டார்.

 மேலும் இந்த பகுதி வழியாக காலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் உடனடியாக தேங்கியுள்ள மழை நிறை அகற்றும்பனையினை தொய்வில்லாமல் மேற்கொள்ளவும்,அந்த பணிகளை தாமதமின்றி சரி  செய்யவும்  அதிகாரிகளுக்கு முதல்வர் ஆலோசனைகளை வழங்கினார், மேலும் அனைத்து பகுதிகளிலும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்,

 

 

Tags :

Share via