வீடு புகுந்து 51 பவுன் நகைகளை திருடிய கொள்ளையர்கள்  கைது 

by Editor / 03-01-2022 10:08:08pm
வீடு புகுந்து 51 பவுன் நகைகளை திருடிய கொள்ளையர்கள்  கைது 

 திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையன்குடி  பழைய கோவில் தெரு அருகே வசித்து வரும் ஆம்ஸ்டர் சைலஸ் என்பவரின் வீட்டிற்குள் மர்மநபர்கள் புகுந்து  51பவுன் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுள்ளார். இத்திருட்டு   சம்பவம் குறித்து ஆம்ஸ்டர்சைலஸ் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இத்திருட்டு சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை  கைது செய்ய வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா,  மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள்காதர்மைதீன்,செல்வகுமார், ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்தும் வள்ளியூர்  உவரி காவல் ஆய்வாளர் செல்விக்கு  உத்தரவிட்டதன் பேரில் உவரி சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் உதவியுடன்  சந்தேகத்தின் அடிப்படையில் தென்காசி மாவட்டம், தட்டான்பட்டியை சேர்ந்த  ஈசாக்(31),  பெஞ்சமின்(33), மற்றும் மரிய ராணி @ காளிஸ்வரி(31)  ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்கில் திருடப்பட்ட  அனைத்து நகைகளையும்,33ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல்செய்தனர்.

 

Tags :

Share via