கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் தயார் நிலையில் உள்ளதாக முதல்வர் தகவல்.
தமிழ்நாட்டில் கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
நாட்டில் கோவிட்-19 தொற்று பரவல் நிலை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும்,74 சதவிகித அளவில் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,தமிழ்காத்தில் தயார் நிலையில் கொரோனோ ,ஒமைகிறான் சிகிச்சை மையங்கள்,ஆக்ஜிசன் இருப்பு,படுக்கை வசதிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் தமிழகத்தில் தயாராக இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசினார்.
Tags :