மின்சாரம் தாக்கி வெல்டிங் ஊழியர் பலி

by Staff / 12-08-2023 02:11:54pm
மின்சாரம் தாக்கி வெல்டிங் ஊழியர் பலி

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நுங்கம்பாக்கம் லேக் ஏரியா,நான்காவது தெருவில், 'வெல்டிங்' பட்டறை நடத்தி வருகிறார். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், என்பவர், லேக் ஏரியாவில் தங்கியிருந்து, இந்த பட்டறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை செய்தார். நேற்று காலை, வழக்கம் போல் ரமேஷ் வேலை செய்த போது, வெல்டிங் மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via