தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

by Editor / 02-03-2024 09:35:22am
தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவது அவசியம். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம்

Share via