டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி 4 வயது குழந்தை காயம்.

by Admin / 02-03-2024 09:08:24am
டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி 4 வயது குழந்தை காயம்.

 

கோவில்பட்டி ராஜீவ் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பொன்னுராஜ்(42)இவர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த வாரம்  விடுமுறைக்காக கோவில்பட்டிக்கு  வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை தனது மகன் சாய் கிரிஷ்சை (4)   மந்திதோப்பு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் உறவினர்   ஊரான மேலப்பட்டி அருகே உள்ள துரைசாமிபுரத்துக்கு செல்லும் போது இளையரசனேதல் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்  செல்லும்போது கட்டுமான இடிபாடு பொருட்களை ஏற்றி வந்த டிராக்டர் அவர் பயணித்த இருசக்கர வாகனத்தில் மோதி பொன்னுராஜ் சம்பவ இடத்திலே பலியானார். இதில் சாய்கிரிஷ் காயமடைந்தார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார்  பொன்னுராஜ் உடலை மீட்டு  கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த சாய் கிரிஷ்சை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கோவில்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி 4 வயது குழந்தை காயம்.
 

Tags :

Share via