கேரள அரசு பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 20க்கும் மேற்பட்டோர் காயம்

by Staff / 12-09-2022 05:10:40pm
கேரள அரசு பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி 20க்கும் மேற்பட்டோர் காயம்

கேரளா அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் அந்த பேருந்து எர்ணாகுளத்துக்கு சென்றது சாக்கோச்சான்  வாலி என்னும் இடத்தில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியபோது மிகப் பெரிய கல்லில் மோதி உள்ளது. இதில் நிறுத்தத்தில் முன் பக்க டயர் ஒன்று வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via