லாரி மோதி 52 ஆடுகள் பலி.காவல்துறை விசாரணை.

by Editor / 23-01-2022 06:39:02pm
லாரி மோதி 52 ஆடுகள் பலி.காவல்துறை விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பறையன்குளம் கிராமத்தை சேர்ந்த  முனியசாமி,நாகராஜ்,இவர்கள்இருவரும் 130க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு வருவது வழக்கம்.இதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்றும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு கமுதி-- அருப்புக்கோட்டை ரோட்டில் காவடிபட்டி அருகே கிடையில் அடைப்பதற்காக ஆடுகளை கொண்டு சென்றனர். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து கமுதிக்கு சென்ற சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியதில் 52 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. நாகராஜ்க்கு தலையில் காயம் ஏற்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

Tags : Larry collision kills 52 goats.Police investigation.

Share via