தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 35-ம் கட்ட விசாரணை தொடங்கியது.

by Editor / 24-01-2022 05:44:27pm
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 35-ம் கட்ட விசாரணை தொடங்கியது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 35-ம் கட்ட விசாரணை தொடங்கியது/ இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை மொத்தம் 5-நாட்கள் நடைபெற இருக்கும், இந்த விசாரணைக்காக துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த தென்மண்டல ஐஜி,நெல்லை சரக டிஐஜி,மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட மொத்தம் 6-பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.ஒருநபர் விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜி கபில் குமார் சரத்கர்  நேரில் ஆஜர் ஆனார். இதுவரை ஆனையம் தரப்பில் 1417-பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் 1037-பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர் மேலும் விசாரணை தொடர்பாக 1483-ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Thoothukudi shooting: Phase 35 investigation begins.

Share via