கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 09-11-2023 03:49:09pm
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் கேசவனகுப்பம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 28) மணவாளநகரில் தங்கி, போளிவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.கடன் தொல்லை காரணமாக கடந்த சில மாதங்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் மாலை தான் தங்கியிருந்த வீட்டின் மின்விசிறியில் துாக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.இதையடுத்து, உடன் பணிபுரியும் ராஜேஷ் என்பவர், அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, இவரது தந்தை பழனி கொடுத்த புகாரின்படி மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via