ஆசிரியை கொலை உறவுக்கார வாலிபர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் மெட்டில்டா (53)இவர் பண்டாராஞ்செட்டி விளைப்பகுதியில் வசித்து வருகிறார்.குலசேகரன் பட்டினத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இன்று மாலை இவரது வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து அருகில் உள்ள வீட்டிலுள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மெட்டில்டா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.இதனை தொடர்ந்து அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.உறவுக்காரரான தீபக் ஆசிரியையிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.தனியாக இருந்த ஆசிரியை பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி குலசேகரப்பட்டிணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :