டெல்லியில் குடியரசு தினம்
இந்தியாவின் 73 வது குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் மூவர்ண தேசீயக்கொடியை ஏற்றி வைத்து,டெல்லி ராஜ் பாதையில் முப்படை ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள்,ராணுவ தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். காஷ்மீர் ஸ்ரீநகரில் உயிர் நீத்த மூன்று வீரர்கள் குடும்பத்திருக்கு விருதும் பாராட்டு பத்திரமும் வழங்கினார் குடியரசு தலைவர். கொரோனா பரவல்காரணமாகர வெளிநாட்டு விருந்தினர் அழைக்கப்படவில்லை.இருபத்து ஐந்தாயிரத்துக்கு மேற்பட்டோர் விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர்.ராணுவத்தினரின் அணிவகுப்பை தொடர்ந்து ராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகள் நடந்தேறின.
Tags :