அழுகிய நிலையில் இளைஞரின் உடல் காவல் துறை விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டின் உள்ளே அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் உடலை காவல்துறையினர் மீட்டனர்.
தாழக்குடி வீரநாராயணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவருக்கு ஹரிஸ்பாபு என்ற மகன் உள்ளார்.
இவரும் இவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஹாரிஸ்பாபு குடிப்பழக்கத்துக்கு ஆளாகி உள்ளார்.
இவரது தாயார் வெளி ஊருக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்து தூர் நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கப்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது ஹரிஸ் பாபு அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த மரணம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :