கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

by Editor / 08-02-2022 08:31:38am
 கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 12வார்டுகளில்  33 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் வேட்புமனு பரிசீலனையின் போது 1,2மற்றும் 11வது வார்டில் மனுதாக்கல் செய்து இருந்த 3 திமுக வேட்பாளர்கள் மனுக்களில் முன் மொழிந்தவர்கள் பெயர் போலியாக இருந்த காரணத்தினால் அந்த மூன்று பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இன்று மனுக்கள் வாபஸ் பெறும் நிகழ்வு நடந்தது. இந்நிலையில் 9 வார்டுகளுக்கு மட்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தேர்தல் அலுவலர் சுரேஷ் குமார் அறிவித்த நிலையில் 1,2மற்றும் 11 வார்டுகள் குறித்து எவ்வித தகவலையை தேர்தல் அதிகாரி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இரவுவரை அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வந்த  நிலையில் தேர்தல் ஆணையம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

 

Tags : கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து

Share via