பெங்களூரு ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு: குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்
பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் முசாவிர் ஷாஜிப் என அடையாளம் காணப்பட்டார். அவர் கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்குப் பிறகு அவர் சென்னையில் நண்பருடன் தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த நண்பர் தமிழகத்தில் கொலை வழக்கில் மிகவும் தேடப்படும் குற்றவாளி என்றும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மார்ச் 1ஆம் தேதி நடந்த நிலையில், வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
Tags :