லாரியில் திடீர் தீ விபத்து லாரி முற்றிலும் எரிந்து சேதம்
கோவையில் இருந்து நாகர்கோவில் உள்ள நிறுவனத்திற்கு நேற்று பஞ்சு மெத்தைக்கு தேவையான பஞ்சினை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கிளம்பியுள்ளது.
லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே. கைலாசபுரத்தினை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் லாரியில் வெல்டிங் வைக்கும் வேலை இருந்ததால் சுரேஸ் தனது நண்பர் மைக்கல் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடைக்கு இன்று காலை சென்று வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென லாரியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லாரியில் தீ மள மளவென பிடித்து எரிந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது.
விபத்து குறித்து நாரைக்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :