தமிழகத்தில் 31,892 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 31,892 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15லட்சத்து 31ஆயிரத்து 377ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,95,339ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 18,359பேர் ஆண்கள், 13,533பேர் பெண்கள்.
சென்னையில் ஒரேநாளில் 6,538பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இன்று 288 பேர் உயிரிழந்துள்ளார். 130பேர் தனியார் மருத்துவமனையிலும், 158 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,056ஆக அதிகரித்துள்ளது. இன்று 20,037பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,18,982ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :