திமுக பிரமுகர் வீட்டில் 3 நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை.

by Editor / 04-03-2022 07:46:36am
திமுக பிரமுகர் வீட்டில் 3 நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் பிரபல கல்குவாரி தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ஏவி. சாரதி வீடு கல்குவாரி மற்றும் அலுவலகங்களில் புதன்கிழமை 02 ஆம் தேதி காலை முதல்  வருமான வரித்துறை சோதனை 48 மணி நேரம் கடந்து முன்றாவது நாளாக தற்போது வரை தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.
மேலும்  ஏவி சாரதி மற்றும் அவருக்கு தொடர்புடையா ராணிப்பேட்டை மாவட்டம்  ஆற்காடு  , சென்னை, பெங்களூர், திருவள்ளூர், காஞ்சிபுரம்   உள்ளிட்ட 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags : Income tax officials raided the house of a DMK official for 3 days.

Share via