விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளதாக முதல்வர் தகவல்.

by Editor / 07-03-2022 01:52:33pm
விருதுநகர் மாவட்டத்தில்  மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளதாக முதல்வர் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பெல்ஜியம் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்.அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும். விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.வணிகர்கள், உழவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நிதிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை.இந்தியாவின் முதல் சர்வதேச அறைகலன் பூங்கா தென்கோடி மாவட்டமான தூத்துக்குடியில் அமையவுள்ளது என்பது பெருமை.வ.உ.சியின் பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக அறைகலன் பூங்கா அமையும் நாள் இருக்கும்.அனைத்து துறைகளிலும் தமிழகம் நம்பர் ஒன் என்ற நிலையை விரைவில் அடையும். - முதல்வர் ஸ்டாலின்
 

 

Tags : Chief Minister informed that there is a mega textile park in Virudhunagar district.

Share via