வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

by Staff / 11-11-2022 05:37:58pm
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைந்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் தீர்மானங்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒரு ஆதாரம். ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் நடத்திய வலிமையான சட்டப்போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. மனித நேயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் அயராது பாடுபட்டு வரும் அனைவருக்குமான வெற்றி என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via