மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள்
தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டியை அடுத்த மங்களகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னபையன் (53) என்பவர், மகன் வெங்கடேசன் (31) என்பவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி சொத்தை பிரித்து தருவதில் தகராறில் ஏற்பட்டதில், தந்தை சின்னப்பையன் தாக்கியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த வழக்கு விசாரணை தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதிகட்ட விசாரணை முடவடைந்து சின்னபையன் கொலை செய்தது உறுதியானதையடுத்து நீதிபதி மோனிகா குற்றவாளி சின்பையனுக்கு ஆயுள்தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Tags :