அரசு பேருந்து மோதி 90க்கும் மேற்பட்ட ஆடுகள் -ஆட்டின் உரிமையாளரும் உயிரிழப்பு

by Editor / 28-12-2022 08:13:19am
அரசு பேருந்து மோதி 90க்கும் மேற்பட்ட ஆடுகள் -ஆட்டின் உரிமையாளரும் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவாசனூர் கோட்டையில் இருந்து மேய்ச்சலுக்காக வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த செம்மறி ஆடுகள் மீது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி சம்பவ 90க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு. மேய்ச்சல் ஆட்டுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் உயிரிழப்பு.
விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via