திருமண தோஷம்13 வயது சிறுவனை ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம்

by Staff / 17-10-2022 04:45:27pm
திருமண தோஷம்13 வயது சிறுவனை ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம்

பஞ்சாபின் ஜலந்தரில் பஸ்தி பாவா கேல் பகுதியில், 13 வயது சிறுவனை அவனது ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட பெண் பெயர் மங்லிக். அவருக்கு திருமண தோஷம் இருந்து உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் தன் தோஷம் விலகும் என்று நினைத்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவரது பெற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி,சிறுவனை பெற்றோரிடம் இருந்து அழைத்து வந்து உள்ளார்.

சிறுவனை வீட்டில் வைத்து ஆசிரியர் திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சள் - மருதாணி வைஅத்தல் முதல் தேனிலவு வரை நடத்தி உள்ளார். பிறகு தோஷம் போக்க திருமணமாகி 6 நாட்களுக்குப் பிறகு, அவரே விதவை உடை அணிந்து உள்ளார். இதற்காக அவரே தனது கைகளின் வளையல்களை உடைத்துள்ளார். தாலியையும் அகற்றி உள்ளார். கணவர் இறந்துவிட்டார் என உறவினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட பெண் ஆசிரியை மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்.சிறுவன் வீட்டிற்குச் சென்று முழு கதையையும் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியபோது, ​​அவர்கள் அதிர்ச்சியடைந்தனர், உடனடியாக அவர் மீது புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருமண தோஷம்13 வயது சிறுவனை ஆசிரியை வலுக்கட்டாயமாக திருமணம்
 

Tags :

Share via