மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்பராமரிப்பு பணிகாரணமாக 4நாட்கள் குடிநீர் கட்

by Editor / 07-03-2022 02:46:58pm
மீஞ்சூர் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்பராமரிப்பு பணிகாரணமாக  4நாட்கள் குடிநீர் கட்

சென்னை மீஞ்சூரில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இதில் மார்ச் 8ம் தேதி காலை 8 மணி முதல் 11ம் தேதி காலை 11 மணி வரையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் அந்த நாட்களில் குடிநீர் விநியோகம் நடைபெறாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்த செய்திக்குறிப்பில்:பராமரிப்பு பணிகள் காரணமாக வடசென்னையின் முக்கிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்.மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். இந்த 4 நாட்களுக்கு மட்டும் மாற்று ஏற்பாடாக புழலில் உள்ள 300 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.இதனால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் குடிநீரை பெற்றுக்கொள்ளலாம். 

திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளில் லாரி குடிநீர் தேவைப்படுபவர்கள் 8144930901 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மணலியில் வசிப்பவர்களுக்கு 8144930902 என்ற எண்ணிலும், 

மாதவரத்தில் வசிப்பவர்களுக்கு 8144930903 என்ற எண்ணிலும், 

வியாசர்பாடி பட்டேல் நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தலைமை அலுவலக புகார் பிரிவு எண்கள் 044-45674567, 044-2845 1300 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

 

Tags : Cut drinking water for 4 days due to maintenance work at Minsur Marine Water Treatment Plant

Share via