ரயிலுக்கு அடியில் தீ விபத்து
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி ரயில் நிலையத்தில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கோரக்பூர் - லக்னோ இன்டர்சிட்டி ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் கீழ் பகுதியில் பிரேக் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
Tags :