தாம்பரம் மாநகராட்சியாகிறது....

by Admin / 24-08-2021 04:23:19pm
தாம்பரம் மாநகராட்சியாகிறது....

 தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தின் பொழுது நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சர் கே. என் நேரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் நகராட்சியாக உள்ள தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார் இம்மாநகராட்சியின் கீழ் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாகும்.... தற்பொழுது வரை 15 மாநகராட்சிகள் இருக்கும் சூழலில் தாம்பரம் 16 வது மாநகராட்சியாகமாறுகிறது....

 

Tags :

Share via