பணிநியமன ஆணை- 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 14-03-2022 02:05:47pm
பணிநியமன ஆணை- 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இயங்கும் விடுதிகள் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் மறைந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 3 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளைமுதலமைச்சர் வழங்கினார்.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கான 4 விடுதிக் கட்டடங்கள், 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு பணிகள்நிறைவுற்ற பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

 

 

 

பணிநியமன ஆணை- 10 கள்ளர் சீரமைப்புப் பள்ளிமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 

Tags :

Share via