பதவி உயர்வு வழங்கியதில் சர்ச்சை: ஒரே நாளில் பதவி உயர்வு ஆணை ரத்து

by Editor / 21-03-2022 01:14:54pm
 பதவி உயர்வு வழங்கியதில் சர்ச்சை: ஒரே நாளில் பதவி உயர்வு ஆணை ரத்து

மதுரை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றிய  செந்தில்குமாரி கடந்த 17ம் தேதி பணிமாற்றம் செய்யப்பட்டு, தஞ்சாவூர், குருங்குளம் தேசிய சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பணியிட மாற்ற அறிவிப்பு வெளியான 17ம் தேதி வருவாய்த்துறையில் பணியாற்றும் 50க்கு மேற்பட்டவர்களுக்கு வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் அலுவலர் பணிமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி மாவட்ட வருவாய் அலுவலர்  செந்தில்குமாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஆட்சியர் அனீஷ்சேகர்,  பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட பின் எப்படி ஊழியர்களுக்கு பணிமாற்றம், பதவி உயர்வுக்கான உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும்  இந்த உத்தரவை ஏற்க முடியாது' எனவும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து முதல் நாள் போட்ட தனது உத்தரவை மறுநாளே செந்தில்குமாரி ரத்து செய்தார். இந்த நிகழ்வு மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags : Controversy over granting promotion: Cancellation of promotion order on the same day

Share via