நீதிமன்றம் முன்பு தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர்.

by Editor / 23-03-2022 05:20:24pm
நீதிமன்றம் முன்பு தீக்குளிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  பரமசிவம் இவர் முன்னாள் ராணுவ வீரர் இவருக்கு  பொன்முத்துப்பாண்டி என்ற மகன் உள்ளார். இவர் மீது கொலை,மற்றும்  கொலை முயற்சி, வழிப்பறி, என 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு வழக்கில் சிறைக்கு சென்று விட்டு சமீபத்தில்தான்  நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று பொன் முத்துப்பாண்டி கையெழுத்து போட வந்த போது, வழிப்பறி வழக்கு ஒன்று  தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மகன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கூறி பொன்முத்து பாண்டி தந்தையான  முன்னாள் ராணுவ வீரர் பரமசிவம் கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம்  காரணமாக  நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Attempt to extinguish fire by suddenly pouring kerosene on the court premises.

Share via