உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவின் 7 இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல்
உக்ரேன் மீதான போரில் ரஷ்யாவின் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை எட்டியது போரில் ரஷ்யாவுக்கு பெருத்த சேதம் எற்பட்டதாகவும் 7 ராணுவ தளபதிகள் இதுவரை கொல்லப்பட்டதாகவும் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரில் தங்கள் தரப்பில் 1300 வீரர்கள் உயிரிழந்ததாககிரம்ளின் தெரிவித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என மேற்கு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
படைகளை முறையாக வழி நடத்தவில்லை என 37 வது படைப் பிரிவின் தலைவர் அவரது சொந்த படைகளால் கொல்லப்பட்டதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
Tags :