மதுரை வேலம்மாள் பள்ளிவாகனங்களை ஆய்வு செய்த கல்வி அமைச்சர்

by Editor / 31-03-2022 10:40:05am
மதுரை வேலம்மாள் பள்ளிவாகனங்களை ஆய்வு செய்த கல்வி அமைச்சர்

சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவர் உயிர் இழந்தார். இதனால் வாகன ஓட்டுநர் மற்றும் பெண் ஊழியர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
வாகன ஓட்டுநர் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக உள்ளதா என்பதினை அதிகாரிகள் தினம்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. குறிப்பாக அளவுக்கு மீறி வாகனங்களில் மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அரசின் எச்சரிக்கையை மீறி ஏராளமான தனியார் பள்ளிகள் அரசின் உதவிபெறும் பள்ளிகள் அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்டு செயல்பட்டு வாகனங்களில் குப்பையைப்போல மாணவர்களை அழைத்து செல்வது அரங்கேறிவருகிறது.இதன் தொடர்ச்சியாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மதுரை விரகானுர் வேலம்மாள் மெட்ரிகே மேல்நிலைப்பள்ளியில் உள்ள பள்ளிவாகனங்களை ஆய்வு செய்தார்.

 

Tags : Madurai Velammal Minister of Education inspecting school vehicles

Share via