திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரக நூல் விலை கிலோவிற்கு 30 வரை உயர்வு

by Staff / 01-04-2022 02:51:48pm
 திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரக நூல் விலை கிலோவிற்கு 30 வரை உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவிற்கு 30 வரை உயர்ந்துள்ளது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பஞ்சு விலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் நூல் விலை மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடப்பதற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன.

அதில் அனைத்து ரக நூல் விலை கிலோவுக்கு 30 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ 20 இருபதாவது நம்பர் ஹோம் டு நூல் 363 ரூபாய்க்கும் 24ம்  நம்பர் நூல் 375 ரூபாய்க்கும் 40 ஆம் நம்பர் நூல் 415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via