ஒகேனக்கல்லில் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

by Editor / 10-04-2022 04:59:12pm
 ஒகேனக்கல்லில் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தமிழகத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில்  ஒகேனக்கல் சுற்றுலாதலம் கோடைக்கால கொண்டாட்டத்திற்கு பிரபலமானது. இங்கு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுப்பது ஆயில் மசாஜ்,மீனை வலைவீசி பிடித்து உடனே சுடச்சுட பொறித்து கொடுப்பது..அதனை ரசனையோடு சுவைப்பது.. அருவியில் குளிப்பது  பரிசல் சவாரி செய்வது என அத்தனையையும்  அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்லாமல் கோடைக்கால கொண்டாட்டத்திற்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


 விடுமுறைதினமென்பதால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஞாயிறு விடுமுறையை கொண்டாட குவிந்ததால், ஒகேனக்கல்லில் கூட்டம் களை கட்டியுள்ளது.

 

Tags :

Share via