ராஜஸ்தானில் தெருநாய்கள் கடித்ததால் 11 வயது சிறுமி உயிரிழப்பு.

by Staff / 12-04-2022 05:12:06pm
ராஜஸ்தானில் தெருநாய்கள் கடித்ததால் 11 வயது சிறுமி உயிரிழப்பு.

ராஜஸ்தான் மாநிலம் நோக்கின் நிவாய் உட்பிரிவில் அனிஷா என்ற 11 வயது சிறுமி காலை  6க்கு மலம் கழிப்பதற்காக காட்டு பகுதிற்கு சென்றிருந்தார்.  7 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை என்ற உடனே அனிஷா குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று சிறுமியை தேடினர். சிறுமியின் உடலைச் சுற்றி தெருநாய்கள் இருப்பதை  பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தமிட்டு  நாய்களை விரட்டிய குடும்ப குடும்பத்தினர் அனுஷா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அனிஷாவின் தந்தை லால்கான் பஞ்சாரா, நாய்களால் என் மகளையே இழந்துவிட்டேன் என்று கதறி அழுத வாரு கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

Tags :

Share via