பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்

by Staff / 13-04-2022 11:24:55am
பச்சிளம் குழந்தையை கொடூரமாக தாக்கும் தாய்

ஜம்மு-காஷ்மீரில் 9 மாத கைக்குழந்தையை கொடூரமாக ஈவு இரக்கமின்றி தாக்கும் கொடூர தாயின் காட்சி வைரலாகி வருகிறது.சம்பா  மாவட்டத்தை சேர்ந்த பெண் தனது மடியில் படுத்திருந்த குழந்தையை கன்னத்தில் அறைந்து கழுத்தை நெரித்து அதோடு மெத்தையில் தூக்கி வீசும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனை அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்த நிலையில் அவர்களுக்கு குழந்தையை தாக்குவது தடுக்கவில்லை குழந்தையின் தந்தை வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில் தாய் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு குழந்தை தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் நிகழ்ந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

 

Tags :

Share via