பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர்

by Staff / 16-04-2024 11:00:45am
பதவியை ராஜினாமா செய்யும் பிரதமர்

சிங்கப்பூர் நாட்டின் 3ஆவது பிரதமராக இருப்பவர் லீ சியென் லூங் (72). இவர், மக்கள் செயல் கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்பிக்கள் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், 2 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரதமர் லீ சியென்னும் மே 15ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு லாரன்ஸ் வோங் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via