மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் 3லட்சம் ரூபாய்கொள்ளை.

by Editor / 14-04-2022 08:16:43am
மிளகாய் பொடி தூவி டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம்   3லட்சம் ரூபாய்கொள்ளை.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா பில்லாந்தாங்கல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் என்பவர் கடையில் விற்பனை முடித்துக் கொண்டு பணத்துடன் செய்யாறு நோக்கி வந்துகொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3பேர் சுமங்கலி கிராமம் அருகே வழிமறித்து மிளகாய் பொடி  தூவி அவரை தாக்கிவிட்டு அவரிடமிருந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.இந்த சம்பவம் குறித்து மோரணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via