சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து

by Staff / 15-04-2022 11:29:40am
 சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து

காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலையில் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் அழைத்துச் செல்லும் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாலையோரம் நின்ற அந்த பேருந்தில் திடீரென தீ பேருந்து முழுவதும் பரவியது இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை முழுவதுமாக அணைத்தனர். ஆனாலும் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது கோடை வெயில் காரணமாக இருக்கைகள் தீப்பிடித்து பேருந்தில் பரவியதாக அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via