ஜி எஸ் டி வரி உயர்வு குறித்து வெளியான தகவலுக்கு கவுன்சில் பதில்
டிவி ஆடைகள் சாக்லேட்டுகள் உள்ளிட்ட143 பொருள்களின் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டதாக வெளியான தகவலுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் அப்பளம் வெள்ளம் பவர் பேங்க் கடிகாரம் தோல் பொருள்கள் உள்ளிட்ட 143 பொருள்களில் 92% பொருள்களின் வரியை 18 லிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கவும் அது குறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை என கவுன்சில் தெரிவித்துள்ளது. பாதிக்கு மேற்பட்ட பொருள்களை 28 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவது திட்டம் இல்லை என்றும் வரி விகிதத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு அது குறித்து எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :