அரசு பேருந்து மோதல்.- பெண் பலி
அரசு பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சம்பூரணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் ஆண்டான்கோயில் பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சம்பூர்ணத்தின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :