சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff / 29-04-2022 05:06:14pm
சென்னை ஐஐடியில் புதிதாக மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் தமிழகம் மற்றும் 15 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடந்த 19ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தடுத்த நாள்களில் மாணவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஐஐடியில் உள்ள அனைத்து மாணவர்கள், பேராசிரியர்கள், என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐஐடி.யில் 7,590 பேர் தங்கியுள்ளனர். அங்குள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவுகளின்படி 171 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182ஆக அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via

More stories