வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு ஒருவர் பலி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் தம்பட்டமலைப்பட்டி கிராமத்தில் வயிற்று வலி காரணமாக 40 வயதுடைய தலைவாசல் என்பவர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழவளவு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :