ஆன்லைன் ரம்மி விளையாட்டு ரூபாய் 35 லட்சம் வரை இழந்த ஐடி ஊழியர் தற்கொலை

by Staff / 30-04-2022 04:37:50pm
ஆன்லைன் ரம்மி விளையாட்டு ரூபாய் 35 லட்சம் வரை இழந்த  ஐடி ஊழியர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் 35 லட்சம் ரூபாய் வரை இறந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போரூர் விக்னேஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த  ஐடி ஊழியராக இருந்த பிரபு கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .விசாரணையில் கிரெடிட் கார்டு மூலமாக 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று வீடு கட்ட அவரது தந்தை கொடுத்த 20லட்சம் ரூபாய் பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பிரபு அதில் 35 லட்ச ரூபாய் பணத்தை இழந்தது தெரியவந்தது .மேலும் கடனை செலுத்த கூறி வங்கியிலிருந்து அழுத்தம் தர பட்டதாகக் கூறப்படும் நிலையில் இந்த விவகாரம் மனைவிக்கு தெரியவந்ததால் பிரபு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via