இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 13 பேர்

by Staff / 30-04-2022 04:41:13pm
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வர முயன்ற 13 பேர்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வார  முயற்சி 13 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இலங்கையின் திரிகோண மலையில் வசித்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தங்களது சொத்துக்களை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடிக்கு வருவதற்கு காங்கேசன் கடற்கரையில் படகுக்கு காத்திருந்த போது அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்தது . இலங்கையில் இருந்து இதுவரை தமிழகத்தில் 75 பேர் அகதிகளாக வந்து இருக்கும் நிலையில் இவர்கள் மண்டப அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via